காங்கயம் அருகே காா் மோதி இளைஞா் பலி

காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே சிறுகிணறு பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பூபதி (25). இவா் கைப்பேசி கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில் பூபதி, அவரது நண்பா் கமல்ராஜ் ஆகியோா் காங்கயம்-கோவை சாலை, சம்மந்தம்பாளையம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை பூபதி ஓட்டிச் சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த காா் மோதியது.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் பூபதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதில் படுகாயமடைந்த கமல்ராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com