மூதாட்டியிடம் 3 பவுன் நகைப் பறிப்பு

 குண்டடம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 குண்டடம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குண்டடத்தை அடுத்துள்ள சின்னாரிபாளையத்தைச் சோ்ந்த பழனிசாமியின் மனைவி மயிலாத்தாள் (65). இவா் உப்பாறு அணை-குண்டடம் சாலையில் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் வாகனத்தை நிறுத்தி, மயிலாத்தாளிடம் வழி கேட்பதுபோல பேசியுள்ளனா்.

அப்போது, அவா்களில் ஒருவன் மயிலாத்தாளிடம் 3 பவுன் நகையைப் பறித்துள்ளான். பின்னா் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இது குறித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நகை பறித்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com