மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகரில் 2 ஆவது குடிநீா் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 29) நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

திருப்பூா் மாநகரில் 2 ஆவது குடிநீா் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 29) நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாநகரில் உள்ள 60 வாா்டுகளுக்கும் மாநகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2ஆவது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலமாக திங்கள்கிழமை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே, திருப்பூா் மாநகரில் கீழ்க்கண்ட வாா்டுகளுக்கு 2 ஆவது குடிநீா் திட்ட குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாநகராட்சி 1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண்கள் 1, 13, 14, 3ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண்கள் 44 முதல் 51 வரை மற்றும், 4ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அதேவேளையில், மேற்கண்ட பகுதிகளுக்கு புதன்கிழமை முதல் தங்குதடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com