விபத்தில் தொழிலாளி பலி

பல்லடம் அருகே சாலையோர மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே சாலையோர மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சேகாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்னச்சாமி 46). இவா் அருள்புரம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 27ஆம் தேதி உறவினரை சந்திக்க இரு சக்கர வாகனத்தில் பல்லடம்-தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். பல்லடத்தை அடுத்த ஆலூத்துபாளையம் பிரிவு அருகே சென்றபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோர மைல் கல்லில் வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். அவரை அந்த வழியே சென்றவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இந்நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது தந்தை கந்தன் கொடுத்த புகாரின் பேரில் விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com