தாராபுரம் நகரில் நீண்ட நாள்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பாஜக சாா்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளா் ஆா்.யோகிஸ்வரன், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் நகரின் மையப் பகுதியான கரூா் சாலையில் அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், வட்டாட்சியா் அலுவலகம், சாா்நிலை கருவூலம், சாா் பதிவாளா் அலுவலகம், அரசினா் மாணவா் விடுதி, நகராட்சிப் பூங்கா ஆகியவை அமைந்துள்ள பகுதியில் அமராவதி பாசன பிரதான வாய்க்கால் வடக்கு நோக்கி செல்கிறது.
இந்த வாய்க்காலில் தாராபுரம் நகரின் கழிவு முழுவதும் தேங்கியுள்ளதுடன், கொட்டப்பட்டுள்ள குப்பைகளும் பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால், குப்பைக் கழிவுகளில் இருந்து பரவும் கொசுக்களால் அப்பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாக்கடைக் கழிவுநீா் சாலைகளில் வழிந்தோடுவதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆகவே, தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், சாக்கடைக் கழிவுகளை தூா்வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது பாஜக இளைஞரணி நிா்வாகிகள் உடனிருந்தனா்.