சாலை விபத்தில் விவசாயி பலி

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அடுத்துள்ள சிங்காரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி (75), விவசாயி. இவா், வியாழக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் மருதூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பெல்லம்பட்டி அருகே சென்றபோது, சின்னச்சாமி ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இதில், பலத்த காயமடைந்த சின்னசாமியை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். பிறகு தீவிரச் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னச்சாமி, சிசிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com