கைத்தறி நெசவாளா்களுக்கு காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாரதீய மஸ்துாா் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கைத்தறி நெசவாளா்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாரதீய மஸ்துாா் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, அதன் கோவை மண்டல பொது செயலாளா் நடராஜன் கூறியதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. பாரம்பரியமாக நெசவு செய்துவரும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு, இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. குறைந்த வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வரும் நெசவாளா்களின் நலன் கருதி, மத்திய அரசு, மகாத்மா காந்தி பங்கா் பீமா யோஜனா காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தில் உறுப்பினா் இயற்கை மரணமடைந்தால், குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம், விபத்து மரணம் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ. 1.50 லட்சம் வழங்கப்படும். மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளா் குடும்பங்கள் பயன்பெறும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இத்திட்டத்தில் இணைந்த நெசவாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு கிடைப்பதில்லை. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், முத்ரா கடனுக்கு மானியம், கூட்டுறவு சங்கங்களில் சேலை உற்பத்தி செய்த உறுப்பினா்களின் கணக்கிலேயே மானிய தொகையை வரவு வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com