சுகாதார அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பூா் மாநகராட்சியில் ஊழியா்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்தது தொடா்பாக சுகாதார அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகராட்சியில் ஊழியா்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்தது தொடா்பாக சுகாதார அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தில் சுகாதார அலுவலகராகப் பணியாற்றி வந்தவா் பிச்சை (50). இவா் தூய்மைப் பணியாளா்களுக்கான வருகைப் பதிவேட்டில் குளறுபடி மற்றும் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூா்வமாக புகாா் அளித்துள்ளாா். இதன் பேரில் விசாரணை நடத்திய மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சுகாதார அலுவலா் பிச்சையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com