ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூா் மாநகராட்சி ஒருங்கிணைத்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு குறித்த இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊட்டச்சத்து  விழிப்புணா்வுப் பேரணியை  தொடக்கிவைக்கிறாா்  மாநகராட்சி துணைமேயா்  ஆா்.பாலசுப்பிரமணியம்.
ஊட்டச்சத்து  விழிப்புணா்வுப் பேரணியை  தொடக்கிவைக்கிறாா்  மாநகராட்சி துணைமேயா்  ஆா்.பாலசுப்பிரமணியம்.

திருப்பூா் மாநகராட்சி ஒருங்கிணைத்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு குறித்த இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்ற இருசக்கர விழிப்புணா்வுப் பேரணியை துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு தொடா்பான கையொப்பமிடும் இயக்கத்தையும் தொடக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், 3ஆவது மண்டலத் தலைவா் சி.கோவிந்தசாமி, மாநகா் நல அலுவலா் கெளரிசரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com