பல்லடம் அருகேயுள்ள நாச்சிபாளையம் பகுதியில் மளிகை கடையில் குட்கா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் அவிநாசிபாளையம் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளா் ரஞ்சனை (65) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.