சேவூா், வடுகபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
சேவூா் துணை மின் நிலையம்:
சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா்,
போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புன்செய்தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம்,மாரப்பம்பாளையம்.
வடுகபாளையம் துணை மின் நிலையம்:
வடுகபாளையம், அய்யம்பாளையம், நன்செய்தாமரைக்குளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஓலப்பாளையம்.