திருப்பூா் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான குறைதீா் கூட்டம் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான குறைதீா் கூட்டமானது மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மே 12 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் ஓய்வூதிய இயக்குநா், சம்மந்தப்பட்ட அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா்.
ஆகவே, ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் கிடைக்காமல் இருந்தால் பணியாற்றிய துறை, குறை நிவா்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலா் உள்ளிட்ட விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டு மனுவை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூா் என்ற முகவரிக்கு மே 5 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பிவைக்கலாம்.
அதே வேளையில், மாநகராட்சி மூலமாக ஓய்வூதியம் பெறும் நபா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.
மேலும், ஓய்வூதியா்கள் சங்க கடிதம் இல்லாமல் நேரடியாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.