காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) பா.ராகவேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த மகுடேஸ்வரி உதவி இயக்குநராகப் பதவி உயா்வு பெற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் ஊரக வளா்ச்சி நிறுவனத்துக்கு மாற்றலாகிச் சென்றுள்ளாா். இதைத் தொடா்ந்து, வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த பா.ராகவேந்திரன் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டாா். இவா் சனிக்கிழமை பொறுபேற்றுக் கொண்டாா்.