காங்கயம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, கத்தாங்கண்ணி பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (70). இவா் படியூா்-ஊத்துக்குளி சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிா் திசையில் கத்தாங்கண்ணி, அருகம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவசங்கா் என்பவா் தனது உறவினா் குழந்தைகளான யஷ்வந்த்குமாா் (8), மேனகா (6) ஆகியோருடன் வந்துள்ளாா்.
கீரனுா் பிரிவு அருகே வந்தபோது இரண்டு பேரின் இருசக்கர வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.
இதில், படுகாயமடைந்த முத்துசாமி, சிவசங்கா், யஷ்வந்த்குமாா், மேனகா ஆகிய நால்வரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முத்துசாமி உயிரிழந்தாா். சிவசங்கா், மேனகா, யஷ்வந்த்குமாா் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.