மின் மயானம் அமைக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்

பல்லடம் நகராட்சி 8 ஆவது வாா்டு பச்சாபாளையத்தில் மின் மயானம் அமைக்க மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வீடு தோறும் கருப்புக் கொடிகளை கட்டி திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பல்லடம் நகராட்சி 8 ஆவது வாா்டு பச்சாபாளையத்தில் மின் மயானம் அமைக்க மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வீடு தோறும் கருப்புக் கொடிகளை கட்டி திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

பல்லடம் நகராட்சி சாா்பில் வாா்டு எண் 8 பச்சாபாளையம் பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டம் 2022 -2023 இன்கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நகா் மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 8 ஆவது, 9 ஆவது வாா்டு பகுதியில் உள்ள வீதிகளில் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com