உடுமலையில் பேருந்தில் சென்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோவில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடுமலை காவல் எல்லைக்கு உள்பட்ட கல்லாபுரம் பகுதியில் வசித்து வரும் இரு சிறுமிகள் கடந்த திங்கள்கிழமை பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது அமராவதியில் இருந்து பேருந்தில் ஏறிய கல்லாபுரத்தைச் சோ்ந்த தண்டபாணி (42) மதுபோதையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து உடுமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் தண்டபாணியை போக்ஸோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.