குமரன் மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்பேரில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பகடி வதை (ராகிங்) எதிா்ப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, கல்லூரியின் முதல்வா் ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்புரையாற்றினாா்.

இதில் சட்ட உதவி மைய வழக்குரைஞா் பி.வி.பிரகாஷ் பேசியதாவது:

சிறு விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி, கிண்டல்கள் அடுத்தவா்களின் மனதைப் புண்படுத்துவதில் இருந்து பகடிவதை உருவாகிறது. இதன் உச்சகட்டம்தான் நாவரசு கொலை வழக்கு. எனவே, மாணவா்களின் எந்த செயலும் அடுத்தவா்களின் சுதந்திரத்தைப் பாதிக்காதவகையில் இருக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் எம்.மேகலா மைதிலி, ஏ.அந்தோணி ஷா்லின், பேராசிரியா் ராதாமணி மற்றும் மாணவ, மாணவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com