அவிநாசி அருகே உள்ள இராமநாதபுரத்தில் ஆரம்ப துணை சுகாதார மையம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு ஒன்றியச் செயலாளா் இசாக் தலைமை வகித்தாா். மாவட்ட குழுஉறுப்பினா் சண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில்,பொதுமக்கள் அவசர கால நலன் கருதி, இராமநாதபுரம் ஊராட்சியில் ஆரம்ப துணை சுகாதாரம் மையம் அமைக்க வேண்டும். தொட்டக்களாம்புதூா், ஆதிதிராவிடா் காலனி ஆகிய இரு பகுதியில் உள்ள மயானத்துக்கு பாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.