திருப்பூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 295 மது பாட்டில்கள், 9.5 லிட்டா் ‘கள்‘ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.