பெருமாநல்லூா் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த இரு மாடுகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியபாமா (50). இவரது தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை கட்டியிருந்த இரு மாடுகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், இவரது தோட்டத்தில் தங்கி இளநீா் வியாபாரம் செய்து வந்த லட்சுமணன் (40), அவரது மனைவி கெளசல்யா (24), பூங்கொடி (54)
ஆகியோா் மாடுகளைத் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.