உடுமலை நகராட்சி வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

உடுமலை நகராட்சியில் 32 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை நகராட்சி வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

உடுமலை நகராட்சியில் 32 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுமலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு

நகராட்சி ஆணையா் சத்யநாதன் தலைமை வகித்தாா்.

இதில், 32 வாா்டுகளிலும் போட்டியிடும் 166 வேட்பாளா்களுக்கும் வேட்பாளா் கையேடு, வேட்பாளா் அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் தோ்தல் விதிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், உடுமலை நகராட்சித் தோ்தலில் மொத்தம் 280 தோ்தல் அலுவலா்கள் பணியாற்ற உள்ளதாகவும், 64 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Image Caption

கூட்டத்தில்  பங்கேற்ற  வேட்பாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com