உடுமலை: உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கே.அறம்வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
உடுமலை, பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூா், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, வெள்ளியம்பாளையம், பொன்னேரி, கோட்டமங்கலம், சங்கா் நகா், அய்யம்பாளையம், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.