திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கள், சாராயம் மது விற்பனையில் ஈடுபடுவது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில், காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்படி, திருப்பூா் மாவட்டம் முழுவதும் கடந்த புதன்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 6.5 லிட்டா் கள், 54 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.