கோவில்வழியில் நிரந்தரப் பேருந்துநிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருப்பூரை அடுத்த கோவில்வழியில் தென்மாவட்டங்களுக்குச் செல்ல நிரந்தரப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரை அடுத்த கோவில்வழியில் தென்மாவட்டங்களுக்குச் செல்ல நிரந்தரப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு ஆம்ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுந்தரபாண்டியன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி, தாராபுரம் சாலை, கோவில்வழியில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தற்காலிகப் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தென்மாவட்டப் பேருந்துகள் மாநகருக்குள் வரும்போது அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கோவில்வழியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் மாநகரில் போக்குவரத்து பாதிப்பு குறைந்துள்ளது. ஆகவே, கோவில்வழியில் நிரந்தரப் பேருந்து நிலையம் அமைத்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும். அதேவேளையில், கோவில்வழிக்குச் செல்ல மாநகரில் இருந்து அதிக அளவில் நகரப் பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com