மாவட்டத்தில் ஒரே நாளில் 31,781 பேருக்கு தடுப்பூசி

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 31, 781 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 31, 781 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட இளம் சிறாா்கள், 18 வயதுக்கு மேற்பட்டோா் என மொத்தம் 20.21 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 13.80 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 20ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலமாக 31,781 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2,536 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com