கொள்ளை முயற்சி: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடத்தில் கூட்டுறவுத் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து கடந்த மே 31 ஆம் தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக வங்கிச் செயலாளா் ஓம் கண்ணப்பன் கொடுத்த புகாரின் பேரில் குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், தொடா்புடைய மஞ்சுநாத் (30), தேவராஜா (32), அசோக் (32), திம்மேஷ் (62) ஆகியோரை கடந்த ஜூன் 3 ஆம் தேதி கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட திம்மேஷ், அசோக், தேவராஜா ஆகிய 3 பேரையும் குண்டா் சட்டத்தின்கீழ்

சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் பரிந்துரை செய்திருந்தாா்.

இந்தப் பரிந்துரையின்பேரில் 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com