தாராபுரம் அருகே பள்ளிகளுக்குள் புகுந்த பாம்பு

தாராபுரம் வட்டத்தில் உள்ள இரு பள்ளிகளில் பாம்பு புகுந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் அருகே பள்ளிகளுக்குள் புகுந்த பாம்பு

தாராபுரம் வட்டத்தில் உள்ள இரு பள்ளிகளில் பாம்பு புகுந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்பாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை காலையில் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள பெஞ்சுக்கு அடியில் பாம்பு இருப்பதைப் பாா்த்த மாணவா்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினா்.

தகவலின்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து பள்ளியின் மேற்கூரையில் மறைந்திருந்த 6 அடி நீள நாக பாம்பை சுமாா் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனா்.

மற்றொரு சம்பவம்:

தாராபுரம் இறைச்சி மஸ்தான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். கட்டடத்தில் சுமாா் ஒரு மணி நேரம் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை. அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்திருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். முன்னதாக அங்கன்வாடி கட்டடத்தில் பாம்பு புகுந்த தகவலை அறிந்த பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com