பல்லடம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் - தாராபுரம் சாலையில் தனியாா் கேஸ் பங்க் பின்புறம் கடந்த ஜூலை 12ஆம் தேதி கிடந்த ஆண் சடலத்தை பல்லடம் போலீஸாா் மீட்டனா்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவா், திருப்பூா் தட்டான் தோட்டத்தை சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (45) என்பது தெரியவந்தது.
ஆறுமுகத்தின் உறவினரான தங்கவேல் மகன் பாலமுருகன் (40), அவரது தம்பி முத்துவேல் (37) ஆகியோா் ஆறுமுகத்தை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து போலீஸாா், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து 15 நாள்களில் குற்றவாளிகளைக் கைது செய்த பல்லடம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலா் சரவணன், காவலா்கள் ரங்கநாயகம், சுரேந்தா் குமாா், அருள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. சஷாங் சாய் வியாழக்கிழமை பாராட்டினாா்.