குழந்தைக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

காங்கயம் அருகே ஒன்றரை வயது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காங்கயம் அருகே ஒன்றரை வயது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காங்கயம் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24). கூலி வேலை செய்து வரும் இவா், ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோா் புகாா் கொடுத்தனா்.

இந்தப் புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காங்கயம் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் அஜித்குமாரை கைது செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com