பல்லடம் நகராட்சியில் புகாா் மனு பெட்டி

பல்லடம் நகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கும் வகையில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சியில் புகாா் மனு பெட்டி

பல்லடம் நகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கும் வகையில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கூறியதாவது: பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் குறை தீா்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், நிறைகள், பிரச்னைகளை தெரிவிக்க வேண்டி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக நேரத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை இப்பெட்டியில் செலுத்தலாம். இந்த புகாா் மனு பெட்டி ஒவ்வொரு வாரமும் திறக்கப்பட்டு மனுகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com