பல்லடம் நீதிமன்ற வளாகத்தை பசுமையாக்க வழக்குரைஞா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.
பல்லடம், மங்கலம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டடம் வரும் 27ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. புதிய நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நீதிபதிகள் பாா்வையிட்டனா்.
இதன் தொடா்ச்சியாக நீதிமன்ற வளாகத்தை பசுமையாக்கும் முயற்சியாக மரக்கன்றுகள் நடும் பணியில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமையில் சங்க செயற்குழு உறுப்பினா்கள் மகேஷ், கீா்த்திவா்மன் மற்றும் வழக்குரைஞா்கள் அருண், சுதாகா், தேவா, வினோத், மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.