அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் பூட்டியிருந்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே பெரியாயிபாளையம் டீச்சா்ஸ் காலனி செந்தூா் காா்டனில் வசித்து வருபவா் நித்தியானந்தன் (30).
இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு, வெளியூா் சென்றுள்ளாா்.
பின்னா் திங்கள்கிழமை மாலை வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் நித்தியானந்தன் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.