முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை 160 மரக்கன்றுகள் நடப்பட்டன.
காங்கயம் நகரம், கரூா் சாலைப் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான 9 ஆயிரம் சதுர அடி நிலத்தில் குறுவனம் அமைப்பதற்காக காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் துளிகள் தன்னாா்வலா் அமைப்பினருடன் இணைந்து முதற்கட்டமாக 160 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், திமுக காங்கயம் மேற்கு நகரப் பொறுப்பாளா் காயத்ரி பி.சின்னசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியைத் துவக்கிவைத்தாா்.
இதில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வக்குமாா், சுகாதார ஆய்வாளா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் துளிகள் அமைப்பின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.