திருப்பூா்: திருப்பூரில் கனரா வங்கி சாா்பில் இலவச கைபேசி பழுதுபாா்த்தல் பயிற்சி வகுப்பு வரும் வெள்ளிக்கிழமை (மே 13) தொடங்குகிறது.
இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற மக்களுக்கு இலவச கைபேசி பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை (மே 13) தொடங்குகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த முழு நேர பயிற்சி வகுப்பில் பங்கேற்க 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது மதிய உணவும், இரு வேளை தேநீரும் வழங்கப்படும். மேலும், பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பா்பாளையம் புதூா் என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பயிற்சி தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 94890-43923, 86105-33436 என்ற கைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.