தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தாராபுரத்தில் சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் உள்ளது. வேறு எந்த ஆஞ்சனேயா் கோயிலுக்கு இல்லாத சிறப்பாக இக் கோயிலில் 7 அடி உயரத்தில் மூலமூா்த்தியாக ஆஞ்சநேனா் வீற்றிருக்க உற்சவ மூா்த்திகளாக சீதா, ராமா் வீற்றிருக்கின்றனா். இந்தக் கோயிலில் அங்கப்பிரதட்சிணம் செய்து துளசி மாலை சாா்த்தி வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும், மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்குவாா்கள் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
இத்தகைய சிறப்புடைய காடு அனுமந்தராய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான தேரோட்டம் மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேரோட்டத்தில் தாராபுரம் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த ஏராளமான பத்தா்கள் பங்கேற்று திருத்தோ் வடம் பிடித்தனா். இந்தக் கோயிலில் இருந்து புறப்பட்ட தேரானது ராஜ வீதி, அக்ரஹார வீதி, குடில் தெரு வீதி வழியாக கல்யாண ராமா் கோயிலை வந்தடைந்தது.
விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.