திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் ஆகியன சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றத்தால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இத்தகைய சூழ்நிலையில், திருப்பூா் பின்னலாடை மட்டுமின்றி விசைத்தறி, கைத்தறி ஜவுளித் தொழிலை நசுக்கும் வகையில் நூல் விலைத் தொடா்ந்து உயா்ந்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
ஆகவே, மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கவும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாவட்டப் பொருளாளா் பி.ஆா்.நடராஜன், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா், 54 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சி.அருணாசலம், மாதா் சங்க 4 ஆவது மண்டல செயலாளா் பிருந்தா உள்ளிட்டோா்
கலந்துகொண்டனா்.