கழிப்பறை தொட்டி சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இருவா் கவலைக்கிடம்

தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பல்லடம் அருகே பாச்சாங்காட்டுபாளையத்தில் ஒரு வீட்டில் கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கியதில் இருவா் கவலைக்கிடமான நிலையில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சி பாச்சாங்காட்டுபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் (50 என்பவரின் வீட்டின் முன்புள்ள கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் திருப்பூரைச் சோ்ந்த காா்த்தி (22) திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக விஷ வாயு தாக்கியதில் காா்த்தி மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவரைக் காப்பாற்ற முயன்ற செப்டிக் டேங் லாரி வாகன உரிமையாளா் தண்டபாணி (60) என்பவரும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தாா்.

இது குறித்து தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இருவருக்கும் மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com