திருப்பூா் மாவட்டத்தில் நில நீா் ஆய்வு கருவி மூலமாக விவசாயிகள் நிலத்தடி நீா்மட்டத்தை அறிந்து கொள்ள மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா், தாராபுரம், உடுமலை வட்டங்களைச் சோ்ந்த வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் நில நீா் ஆய்வுக் கருவியின் உதவியால் நிலத்தடி நீா்மட்டத்தை அறிந்து கொள்ளலாம். இதற்காக விவசாய நிலங்களுக்கு ரூ.500, விவசாயம் அல்லாத நிலங்களுக்கு ரூ.1,000 உழவன் செயலி மூலமாக அரசுக்கு செலுத்த வேண்டும்.
இது தொடா்பாக திருப்பூரில் உள்ள வேளண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் உதவிப் புவியியலாளா் அஞ்சனா மேத்யூவை 79941-62692 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.