பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (நவம்பா் 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் இடங்கள்: பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாய்க்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம்.