தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அறிவித்த தினக்கூலியை வழங்க வலியுறுத்தி திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.

அரசு அறிவித்த தினக்கூலியை வழங்க வலியுறுத்தி திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: திருமுருகன்பூண்டி நகராட்சியில் 150க்கும் மேற்பட்ட தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளா் பணியாற்றி வருகிறோம்.

இதில், குடிநீா் பணியாளா், ஓட்டுநா்கள், டிபிசி ஊழியா்களுக்கு தினக்கூலி ரூ.593 வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அண்மையில் உத்தரவிட்டுள்ளாா்.

ஆனால், தற்போது வரையில் இது அமல்படுத்தவில்லை எனவே மாவட்ட ஆட்சியா் அறிவித்த தினக்கூலியை உடனடியாக வழங்க வலியுறுத்தியே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.

இதில், திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com