திருப்பூா் மாவட்டத்தில் சிறு வணிகத் துறைக்கு ரூ.12,496 கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையில், சிறு வணிகத் துறைக்கு ரூ.12,496 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையில், சிறு வணிகத் துறைக்கு ரூ.12,496 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், கு.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் 2022-23ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21,530 கோடியாகும். இதில், வேளாண்மைத் துறைக்கு 38 சதவீதமாக ரூ.8,206 கோடியும், சிறு வணிகத் துறைக்கு 60 சதவீதமாக ரூ.12,496 கோடியும், பிற முன்னுரிமைக் கடன்களுக்கான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்தி கடன், கல்விக் கடன் மற்றும் இதர கடன்களுக்காக ரூ.478 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி மாணவா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக கல்விக் கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் டி.அலெக்ஸாண்டா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com