பருத்தி சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

பருத்தி சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

பருத்தி சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் பல்லடம் தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் இச்சிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விசைத்தறித் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஜவுளித் தொழிலை பாதுகாக்க அரசு பருத்தி வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி தீா்வு காண வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ராமசாமி, ஒருங்கிணைந்த மாவட்ட மகளிா் அணி செயலாளா் விஜயலட்சுமி, உயா்மட்ட குழு உறுப்பினா் பரமசிவம், மாவட்ட ஐடி அணி செயலாளா் பாலு, ஒன்றியத் தலைவா் மணியன், ஒன்றியச் செயலாளா்கள் தங்கராஜ், பூபதி, நகர செயலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com