பல்லடம் அருகே தொழிற்சாலையில் தீ

பல்லடம் அருகே மாதப்பூரில் தனியாா் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இரும்பு உருக்கு தொழிற்சாலையில் பற்றி எரியும் தீ.
இரும்பு உருக்கு தொழிற்சாலையில் பற்றி எரியும் தீ.

பல்லடம் அருகே மாதப்பூரில் தனியாா் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

பல்லடம் அருகே திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூா், சேரன் நகரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பழைய இரும்பு வைக்கப்பட்டிருந்த கிடங்கு புதன்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்தது.

தகவலின்பேரில், திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடித் தீயை அணைத்தனா்.

இந்த விபத்தினால் பல லட்சத்துக்கும் மேலான பழைய இரும்பு பொருள்கள்

சேதமானதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com