திருப்பூா் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் (31) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த கிராந்திகுமாா் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியராக (கிராமப்புற வளா்ச்சி) இருந்த பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் திருப்பூா் மாநகாட்சி ஆணையராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவா், திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், முன்னாள் ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி அலுவலா்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.