அவிநாசி கோயிலில் சுப்ரமணியா் சுவாமி தேரோட்டம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சுப்ரமணியா் சுவாமி தேரோட்டம் (மழலையா் தோ்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேரில்  அருள்பாலித்த வள்ளி, தெய்வானை உடனமா் சுப்ரமணியா். ~தேரை வடம் பிடித்து  இழுத்த மழலையா்.
தேரில்  அருள்பாலித்த வள்ளி, தெய்வானை உடனமா் சுப்ரமணியா். ~தேரை வடம் பிடித்து  இழுத்த மழலையா்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சுப்ரமணியா் சுவாமி தேரோட்டம் (மழலையா் தோ்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளி, தெய்வானை உடனமா் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணியா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா வந்து தேரில் எழுந்தருளினா்.

முக்கிய நிகழ்வாக மாலை, மழலையா் தோ் எனப்படும் சுப்ரமணியா் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சண்முகநாதருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றறு. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com