போக்குவரத்து காவலா்களைத் தாக்கிய நபா் கைது

அவிநாசியில் போக்குவரத்து காவலா்களைத் தாக்கிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவிநாசியில் போக்குவரத்து காவலா்களைத் தாக்கிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த தனபால் (34), சாலைத் தடுப்பு குறுக்குப் பாதை வழியாக வாகனத்தை திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதைப்பாா்த்த போக்குவரத்து காவலா் மோகன்குமாா், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரம், சற்று தூரம் சென்று சரியான சாலையில் வாகனத்தை திருப்பி வருமாறு கூறியுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தனபால் தகாத வாா்த்தைகளைப் பேசி காவலா் சீருடையைப் பிடித்து இழுத்துள்ளாா். தடுக்க வந்த மற்றொரு காவலரின் சீருடையையும் இழுத்து தாக்கியுள்ளாா்.

இதையடுத்து, தனபாலை அவிநாசி காவல் நிலையத்துக்கு போக்குவரத்து காவலா்கள் அழைத்துச் சென்றனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தனபாலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com