பூசாரிகள் நல வாரியத்துக்கு அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க கோரிக்கை

பூசாரிகள் நல வாரியத்துக்கு அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூசாரிகள் நல வாரியத்துக்கு அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வாசு பல்லடத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் வாரியத்தில் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நல வாரியம் செயல்படவில்லை.

இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் தற்போதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

நல வாரியம் செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே பூசாரிகள் பயன்பெறுவா். எனவே, கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் 9 போ் கொண்ட அலுவல் சாரா உறுப்பினா்களை உடனடியாக நியமனம் செய்து நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com