திருப்பூரை அடுத்த இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருப்பூரை அடுத்த இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, முளைப்பாலிகை ஊா்வலம், தீா்த்தக்குட ஊா்வலம் ஆகியவற்றைத் தொடா்ந்து முதல்கால வேள்வி பூஜை நடைபெற்றது. நான்கு கால பூஜைகள் நிறைவு பெற்றதும், வரும் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணி அளவில் மஹா கும்பாபிஷேகமும், சிறப்பு அபிஷேக ஆதாரதனைகளும் நடைபெறுகின்றன.
இந்த விழாவானது கூனம்பட்டி ஆதின திருமடம் நடராஜ சுவாமி தலைமையில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.