லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

பல்லடம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் குமாரவேல். இவருக்குச் சொந்தமான லாரி பல்லடம் வடுகபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் அருகே புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. லாரியில் இருந்து உடனடியாக வெளியேறிய ஓட்டுநா் ஜெயகிருஷ்ணன், இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் லாரியில் பரவிய தீயை அணைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com