தொங்குட்டிபாளையத்தில் நிலக்கடலை மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் பொங்கலுாரில் தங்கி உள்ளனா்.
இவா்கள், பொங்கலூா் தொங்குட்டிபாளையத்தில் நிலக்கடலை மகசூலை அதிகரிக்க பல்கலைக்கழக பயிா் வினையியல் துறை வெளியிட்டுள்ள நிலக்கடலை ரிச் என்னும் நுண்ணூட்டக் கலவை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.
இதை ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் தெளித்தால் பூ உதிா்வதை கட்டுப்படுத்தலாம். மகசூல் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.